மயிலங்காடு சந்தையில் இருந்து 500m க்கு உட்பட்ட பகுதிகளில் மீன் மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பான

மயிலங்காடு சந்தையில் இருந்து 500m க்கு உட்பட்ட பகுதிகளில் மீன் மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடு பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது

 

மருதனார் மட பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர்

உடுவில் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட,
மருதனார் மட பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர், அலுவலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரவுகள் எடுத்தனர்.

சுன்னாகம் பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர்

சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட,
சுன்னாகம் பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர், அலுவலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரவுகள் எடுத்தனர்.

உலக புத்தக தினத்தில் இன்று சுன்னாகம் பொது நூலகத்தில் நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது.(10.05.2024)

வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது நூலகத்தில் சுன்னாகம் அலுவலக பொறுப்பதிகாரி திருமதி. வி . கெளரி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது .

பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பிரதம செயலாளர் திரு.வே.பொ பாலசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வலிகாமம் கல்வி வலையம் திரு .ச. கிருபானந்தன் அவர்களும் மேலும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.கிருஷ்ணகுனார் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் நூலகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி

மருதனார்மடம் பொதுச்சந்தையின் தேங்காய் வியாபாரத்திற்கான கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் மருதனார்மடம் பொதுச்சந்தையின் தேங்காய் வியாபாரத்திற்கான கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா எமது சபையின் செயலாளரின் தலைமையில் 2024.04.29ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.