குப்பிளான் தெற்கு விவசாய வீதியின் கிளை வீதிக்கான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது இன்று {08.08.2024 வியாழக்கிழமை} காலை நடைபெற்றது.
குப்பிளான் தெற்கு விவசாய வீதியின் கிளை வீதிக்கான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது இன்று {08.08.2024 வியாழக்கிழமை} காலை நடைபெற்றது.
நல்லாட்சிக்கான புத்தாக்க மைய நிறுவனத்தின்(CGI) அனுசரணையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு இணையத்தின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 02.08.2024 வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு
J/208 திடற்புலம் வீதி சீரமைப்பிற்கான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீதியைப் பயன்படுத்தும் மக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு இன்று {16.07.2024 செவ்வாய்க்கிழமை} பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்றது
வலிகாமம் தெற்கு பிரதேசபையினால் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலைக்கு தரம் பிரித்து போடும் கழிவகற்றல் தொட்டி 7/6/2024 அன்று வழங்கப்பட்டது. நன்றி
வலிகாமம் தெற்கு பிரதேசபையினால் உடுவில் பிரதேச செயலகத்துக்கு பிளாஸ்ரிக் மாத்திரம் போடும் கழிவகற்றல் தொட்டி 7/6/2024 அன்று வழங்கப்பட்டது. நன்றி
சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசுரம் வழங்கும் செயற்பாடானது இன்று ( 04.06.2024 செவ்வாய்க்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைவுற்றுள்ள
புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயம்,
ஈவினை ஆரம்ப தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை பொது நூலகத்தால் இன்று {04.06.2024 செவ்வாய்க்கிழமை} வழங்கப்பட்டது.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று {30.05.2024 வியாழக்கிழமை} நடைபெற்றது.
மயிலங்காடு சந்தையில் இருந்து 500m க்கு உட்பட்ட பகுதிகளில் மீன் மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடு பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது
உடுவில் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட,
மருதனார் மட பொதுச் சந்தையில் புதியகட்டிடம் அமைப்பது தொடர்பாக உலகவங்கி குழுவினர், அலுவலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரவுகள் எடுத்தனர்.